Friday, 24 February 2017

சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நான்சாங் நகரத்தில் ஆடம்பர சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த சொகுசு ஓட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் 3 பேர் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 14 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். இன்னும் பலர் ஓட்டலுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அடுக்குமாடி ஓட்டலில் பல தளங்களில் தீ பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தீ அணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஓட்டலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன.  எச்.என்.ஏ என்ற அந்த ஓட்டல் 4 தளங்களை கொண்டதாகும். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மோகித் கோயல் எட்டாம் வகுப்பு வரை மட்டு
மே படித்துள்ளார்: போலீஸ் தகவல்
ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மோகித் கோயல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்: போலீஸ் தகவல்
ரிங்கிங் பெல்ஸ்’ என்ற நிறுவனம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251–க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சுமார் 7 கோடி பேர் இந்த மொபைலுக்காக ஆன்–லைனில் பதிவு செய்தனர். இந்த அறிவிப்பு பல முன்னணி செல்போன் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதில் சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மொகித் கோயல் மீது காசியாபாத்தைச் சேர்ந்த அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காசியாபாத் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த 2015–ம் ஆண்டு ‘பிரீடம் 251’ செல்போனை வினியோகிப்பதற்காக ரூ.30 லட்சத்தை அந்த நிறுவனத்துக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே எங்களுக்கு அளித்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். என்னிடம் ரூ.16 லட்சத்தை மொகித் கோயல் மோசடி செய்துவிட்டார் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மொகித் கோயலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோகித் கோயலிடம் விசாரணை நடத்திய போது, அவர் 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதும் அதிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். லிங்கெடன் இணையதளத்தில் அமிதி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளதாக கோயல் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால்,  விசாரணையின் போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் தனது ஆங்கிலப்புலமையை மேம்படுத்த தனியாக பயிற்சி வகுப்புகள் சென்றதாகவும்  மோகித் கோயல் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அமிதி பல்கலகைக்கழகம், மோகித் கோயல் தனது பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், அவர் எந்த பட்டபடிப்பை மெற்கொண்டார் அல்லது தொலைதூரக்கல்வியில் பயின்றாரா? என்பது குறித்த இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

Wednesday, 22 February 2017

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வருகை
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார்.

பதவி ஏற்பு:


இதற்கிடையில், பெங்களூரு சென்று, சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய தினகரன், இன்று (பிப்.,23) காலை, அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொள்கிறார். பகல் 12:00 மணிக்கு நடக்கும் இந்த பதவி ஏற்பு விழாவில், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் மாநில நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவருக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லப்பட்டது.

இது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சியின் பொதுச் செயலராக தேர்வு பெறுகிறவர் மட்டும்தான், இப்படியெல்லாம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி, பதவியை பெறுவது வாடிக்கை. கட்சியின் மற்ற எந்தப் பொறுப்புக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கும். ஆனால், தினகரனுக்கு மட்டும், புதிதாக இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலர் சிறையில் இருக்கும் நிலையில், அவர் பொறுப்பை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் தினகரனுக்கு, கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட எண் 5:

தினகரனின் அதிர்ஷ்ட எண் 5. அதனால, ஐந்து கூட்டு எண்ணிக்கை வரும் நாளான 23ல் அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு இப்பதவி அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும், சசிகலா, சிறையில் இருந்து விடுபட, நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால், நான்கு ஆண்டுகள் வரையில், தினகரனுக்கு சிக்கல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மின்சார ரெயிலில் படியில் தொங்கிய 7 பேர் மின்கம்பம் மோதியதால் விழுந்து 3 பேர் பலி

செங்கல் பட்டில் இருந்து விரைவு மின்சார ரெயில் ஒன்று இன்று காலை கடற்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. சென்னை பரங்கிமலை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தது.மின்சார ரெயிலின் படியில் தொங்கியபடி பல இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது  ஒருவர் பை மின்கம்பத்தில் பட்டு படியில் தொங்கிக் கொண்டு இருந்த 7 பேர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தனர்  இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 2 பேர் பெயர் தெரியவந்து உள்ளது ஒருவர் மதுசூதனன்,மற்றொருவர் கோபி

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.உயிர் இழந்தவர்களில் ஒருவர் பெருங்காலத்தூரை சேர்ந்த பிரவீன் ஆவார்.

Tuesday, 21 February 2017

சாகாவரம் பெற்ற புற்றுநோய் செல்கள்

டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் அவர்கள் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியுள்ள ஆன்டியாக்சிடண்ட் ஆராய்ச்சிதான் அது. டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் தன் குழுவினருடன், ஆற்றல்மிக்க மூலிகை ஆன்டியாக்சிடண்ட் கூட்டுப் பொருளான ‘ஜங்கோ பிலோபா’ வடிப்பின் (Ginkgo Biloba Extract) திறனை ஆய்வுக்கூட சுண்டெலிகளைக் (Laboratory Mice) கொண்டு ஆராய்ந்துள்ளனர். சுண்டெலிகளை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுக்கு ‘ஜிங்கோ பிலோபா வடிப்பும்’ மறு குழுவுக்கு வெறும் உணவு மட்டும் கொடுக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் இருவகை சுண்டெலிகள் மூளை செல்களில் ‘ஜிங்கோ பிலோபா’-வின் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக பொதுவாக எல்லாராலும் ஜிங்கோ பிலோபா பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சில ஆராய்ச்சிகளில் அல்சீமர்ஸ்  நோய் வளர்ச்சி வேகத்தை ஜிங்கோ பிலோபா குறைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பீடெர் சுலட்ஜ் நடத்தியுள்ள இந்த ஆராய்ச்சிகளில் ஜிங்கோ பிலோபா மூளை  செல்களின் பலவகை மரபணுக்களின் செயல்பாடுகளை உயர்த்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுண்டெலிகளுக்கு ஜிங்கோபிலோபா கொடுத்த பிறகு மூளை செல்களின் 10-மரபணுக்கள் செயல்திறன் 16-மடங்கு உயர்ந்துள்ளது. 10-மரபணுக்களில் ஒன்று மூளையின் ஹிப்போகாம்பஸ் செயல்பாடுகள் பாராட்டும்படி உயர்ந்திருந்தன. ‘ஹிப்போகாம்பஸ்’ புதியவை கற்பதற்கும் நினைவாற்றலுக்கும் உரிய மூளை உறுப்பு.

மற்ற 9-மரபணுக்களும், பெருமூளை மேற்பரப்பு புறணியின் (Cerebral Cartex) உயிர் வேதியல் Biochemical செயல்பாடுகளை குறிப்பிடும் வகையில் உயர்த்தியிருந்தன. பெருமூைள புறணி ஒருவருடைய நினைவாற்றல், பேச்சுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடு, உடல் இயக்க அசைவுகள் போன்றவை உருவாகும், ஒழுங்குப்படுத்தும் முக்கியப்பகுதி.

ஜிங்கோ பிலோபா உட்கொண்டதால், மேலே குறிப்பிட்டுள்ள மரபியல் செயல்பாடுகள் மேம்பாடு, அறிவாற்றல் செயல்பாடுகள் (Cognition) மற்றும் நினைவாற்றல் இரண்டும் ேமம்பட்டுள்ளன.

உயிரியல் சுழற்சி செய்முறைகளால், உடல் செல்கள் வளர்ச்சி, DNA இரட்டிப்பு (Replication), புதிய செல்கள் உருவாக்கம் ஆகியவை இயல்பாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இதைப் போலவே ஆன்டியக்சிடண்டுகள் செல் சுழற்சி இயல்பாக நடைபெறுவதை ஆன்டியாக்சிடண்டுகள் ஒழுங்குபடுத்துகின்றன.

புற்றுச் செல்களின் மரபணுக்களும் ஆன்டியாக்சிடண்ட்களும் உடலில் உள்ள ஏறத்தாழ எல்லா செல்களிலும், ‘அபோப்டோசிஸ்’ எனும் ‘செல் தற்கொலைத் திட்டம்’ அமைந்துள்ளது. செல்கள் குறிப்பிட்ட காலம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்ததும், தற்கொலைத் திட்டத்தின்படி, உயிரியல் சுழற்சி நிறுத்தப்பட்டு ‘செல் இறப்பு’ தூண்டப்படுகிறது.

இது இயற்கை செல் இறப்பு செய்முறை. நோய் எதிர்ப்பு இயக்கம் செயல்பட்டு இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. முதிர்ந்த செல்களில் மரபியல் குறிப்புகள் சிதைந்து விடுவதால், அவை அகற்றப்படாவிட்டால், புற்றுச் செல்லாக மாற்றமடையக் கூடும். அதனால், இந்த ‘செல் தற்கொலைத் திட்டம்’ புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

புற்றுச்செல்களில் ‘தற்கொலைத் திட்டம்’ இல்லை. புற்றுச்செல்கள் ‘சாகாவரம்’ பெற்றவை. இப்போது ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ‘புற்றுச் செல்கள்’ எப்போதோ, புற்றுநோய் அறுவை மருத்துவத்தின் போது  பெறப்பட்ட முன்னாள் புற்றுச்செல்களின் வழித்தோன்றல் செல்கள்தான். புற்றுச் செல்களில் அமைந்துள்ள மரபியல் திட்டம் அவைகளுக்கு ‘சாகாமை’ அளித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், புற்றுச்செல்களை அழியாமல் பாதுகாக்கும் ‘செல் சுழற்சி’யில் ஆன்டியாக்சிடண்டுகள் குறுக்கிட்டுத் தடுப்பதாகவும், புற்றுச்செல்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் (apoptosis) கண்டு பிடித்துள்ளனர். புற்றுச் செல் ஆராய்ச்சிகளில் E-உயிர்ச்சத்து, பீட்டா-கெரோட்டின், மூலிகை வடிப்பான ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்படுகின்றன.

இவை மூன்றும்ஆன்டியாக்சிடண்ட் ஊட்டச்சத்துக்கள்.டென்வெர் ‘AMC’ புற்று ஆராய்ச்சி நிலையத்தில் மார்புப்புற்றுச் செல்கள் ஆராய்ச்சிகளில் ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்பட்டது.புதிய புற்றுச்செல் உருவாக்கும் செய்முறையில் டிஎன்ஏ படியெடுப்புக்கு சற்றுமுன் சிலிமாரின் படியெடுப்பைத் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஆன்டியாக்சிடண்டுகள் புற்றுச்செல் வளர்ச்சியைத் தடுப்பது தெளிவாகிறது. ஆன்டியாக்சிடண்டுகள் நல்ல செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை.

ஃபிரிரேடிகல் சிதைவுகளும் - டிஎன்ஏ பாதுகாப்பும்டிஎன்ஏ மரபணுக்கள், குரோமோசோம்கள் ஆகிய மரபியல் கூறுகளை ஃபிரிரேடிகல்கள் தாக்கிச் சிதைக்கின்றன. இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து இவற்றை ஆன்டியாக்சிடண்டுகள் பாதுகாக்கின்றன. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அவற்றில் மூன்று ஆராய்ச்சிகளைப் பார்ப்போம்.
கோவில் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்
வீடியோ: கோவில் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே 65 தேர் கவிழ்ந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் தனது போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி