Friday, 17 February 2017

பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என நேற்று ஓ.பி.எஸ். அணி தரப்பில் புகார் தெரிவிக்கபட்டது. மேலும் இதுகுறித்து மைத்ரேயன் எம்பி தலைமையில் நேற்று எம்பிக்கள் 10 பேர் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மனு அளித்தனர். 

மேலும் மனுவில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும் விதிகளுக்கு மாறாக சசிகலா பொதுச்செயலாராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ். அணி தரப்பு மனு அளித்திருந்தது. இந்நிலையில் ஓ.பி.எஸ். தரப்பு புகார் குறித்து பதிலளிக்க பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி பிப்ரவரி 28ம் தேதிக்குள் சசிகலா பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment