ஜெயலலிதா சாவில் மர்மம் இல்லை; உள் உறுப்புகள் செயலிழந்தது: மருத்துவர் ரிச்சர்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் இருதயம் பாதிக்கபட்டு, சிறுநீர் தொற்றுபாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கூறினர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர்கள் கூட்டாக கூறியதாவது:
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர்கள் கூட்டாக கூறியதாவது:
மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்க கடமைபட்டுள்ளோம். என்னிடம் (ரிச்சர்டு ஹசான் பீலே) எந்த தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இல்லை. உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வந்துள்ளேன். ஜெயலலிதா மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் இருதயம் பாதிக்கப்பட்டது. சிறுநீர் தொற்றும் இருந்தது. சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருந்ததாலும், ரத்தக் கொதிப்பும் இருந்ததால் இந்த நோய் எளிதில் பரவும் வாய்ப்பு இருந்தது. நோய் தொற்று இருதயம் வரை பரவியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் பாக்டீரியா கலந்து இருந்தது. உலகில் உள்ள அனைத்து சிறந்த மருத்துவமும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு கால்கள் எடுக்கப்படவில்லை. அவர் கால்களுடன்தான் இருந்தார். புகைப்படம் அவசியமில்லை.
காய்ச்சல் என்று வந்தவருக்கு தொடர்ந்து பல்வேறு தொந்திரவுகள் ஏற்பட்டது. நீர்ச்சத்து குறைபாடும் இருந்தது.
தேர்தலின்போது அவர் கைரேகை வைத்தார். கையில் வீக்கம் இருந்ததால், கைரேகை வைத்தார். அதற்கு சாட்சி மருத்துவர் பாலாஜிதான். அவருக்கு கையில் குளுகோஸ் சென்று கொண்டு இருந்ததால் அவரால் கையெழுத்து போட முடியவில்லை. தேர்தல் ஆவணத்தில் என்ன இருந்தது என்பதை படித்தும் பார்த்தார். ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். சிகிச்சைக்கு வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார்.
கைரேகை பெறும்போது ஜெயலலிதா பேசினார் (மருத்துவர் பாலாஜி கூறியது). ட்ரைக்யோஸ்டமி சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியது. மீண்டும் சைகை மூலம் பேசி வந்தார். உடல்நிலை தேறி வரும்போதுதான் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபட்டது.
சிசிடிவி கேமராக்கள் இல்லை...
மருத்துவமனைக்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஜெயலலிதாவை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம். ஜெயலிதாவுக்கு அருகில் இருந்தவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. அரசியல் அழுத்தத்தால் அவருக்கு அளித்த சிகிச்சை அப்போது வெளியிடவில்லை. இரண்டு மாதங்களாகியும் சந்தேகம் தீரவில்லை என்பதால் தற்போது பதில் அளிக்கும் நிலையில் இருக்கிறோம். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
புகைப்படம் அவசியமில்லை...
ஜெயலலிதாவின் மருத்துவமனை புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை.
சசிகலாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது...
யாரை சந்திப்பது என்பது குறித்து ஜெயலலிதாவே முடிவு செய்தார். அவர் இட்லி போன்ற உணவுகளை சாப்பிட்டார். கண்ணாடி கதவு வழியாக ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பார்த்தார். சிகிச்சை பற்றி தினமும் சசிகலாவிடம் விளக்கினோம். தொலைக்காட்சி பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நாளை வீட்டுக்கு செல்லலாம் என்பதை பேப்பரில் எழுதி ஜெயலலிதாவுக்கு காட்டினோம் (ரிச்சர்டு). என்னுடைய குழந்தைகள் பற்றியெல்லாம் அவரிடம் பேசினேன்.
மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவர்கள் அவருடன்தான் இருந்தனர். மாரடைப்பால்தான் அவரது உடல் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
கவர்னரை ஜெயலலிதா பார்த்தார்...
கண்ணாடி கதவு வழியாக கவர்னர் பார்த்தபோது அவரை ஜெயலலிதாவும் பார்த்தார். ஜெயலலிதாவை லண்டன் அழைத்து செல்ல ஆலோசித்து வந்தோம். சிகிச்சை பெற்றது மிகப்பெரிய தலைவர் என்பதால் சிகிச்சை முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 5ஆம் தேதிதான் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.
ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து வந்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசி வந்தேன். பிசியோதெரபி முடிந்த பின்னர் மூச்சு விடுவதற்கு ஜெயலலிதா சிரமப்பட்டு வந்தார்.
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் இருதயம் பாதிக்கப்பட்டது. சிறுநீர் தொற்றும் இருந்தது. சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருந்ததாலும், ரத்தக் கொதிப்பும் இருந்ததால் இந்த நோய் எளிதில் பரவும் வாய்ப்பு இருந்தது. நோய் தொற்று இருதயம் வரை பரவியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் பாக்டீரியா கலந்து இருந்தது. உலகில் உள்ள அனைத்து சிறந்த மருத்துவமும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு கால்கள் எடுக்கப்படவில்லை. அவர் கால்களுடன்தான் இருந்தார். புகைப்படம் அவசியமில்லை.
காய்ச்சல் என்று வந்தவருக்கு தொடர்ந்து பல்வேறு தொந்திரவுகள் ஏற்பட்டது. நீர்ச்சத்து குறைபாடும் இருந்தது.
தேர்தலின்போது அவர் கைரேகை வைத்தார். கையில் வீக்கம் இருந்ததால், கைரேகை வைத்தார். அதற்கு சாட்சி மருத்துவர் பாலாஜிதான். அவருக்கு கையில் குளுகோஸ் சென்று கொண்டு இருந்ததால் அவரால் கையெழுத்து போட முடியவில்லை. தேர்தல் ஆவணத்தில் என்ன இருந்தது என்பதை படித்தும் பார்த்தார். ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். சிகிச்சைக்கு வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார்.
கைரேகை பெறும்போது ஜெயலலிதா பேசினார் (மருத்துவர் பாலாஜி கூறியது). ட்ரைக்யோஸ்டமி சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியது. மீண்டும் சைகை மூலம் பேசி வந்தார். உடல்நிலை தேறி வரும்போதுதான் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபட்டது.
சிசிடிவி கேமராக்கள் இல்லை...
மருத்துவமனைக்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஜெயலலிதாவை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம். ஜெயலிதாவுக்கு அருகில் இருந்தவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. அரசியல் அழுத்தத்தால் அவருக்கு அளித்த சிகிச்சை அப்போது வெளியிடவில்லை. இரண்டு மாதங்களாகியும் சந்தேகம் தீரவில்லை என்பதால் தற்போது பதில் அளிக்கும் நிலையில் இருக்கிறோம். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
புகைப்படம் அவசியமில்லை...
ஜெயலலிதாவின் மருத்துவமனை புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை.
சசிகலாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது...
யாரை சந்திப்பது என்பது குறித்து ஜெயலலிதாவே முடிவு செய்தார். அவர் இட்லி போன்ற உணவுகளை சாப்பிட்டார். கண்ணாடி கதவு வழியாக ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பார்த்தார். சிகிச்சை பற்றி தினமும் சசிகலாவிடம் விளக்கினோம். தொலைக்காட்சி பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நாளை வீட்டுக்கு செல்லலாம் என்பதை பேப்பரில் எழுதி ஜெயலலிதாவுக்கு காட்டினோம் (ரிச்சர்டு). என்னுடைய குழந்தைகள் பற்றியெல்லாம் அவரிடம் பேசினேன்.
மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவர்கள் அவருடன்தான் இருந்தனர். மாரடைப்பால்தான் அவரது உடல் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
கவர்னரை ஜெயலலிதா பார்த்தார்...
கண்ணாடி கதவு வழியாக கவர்னர் பார்த்தபோது அவரை ஜெயலலிதாவும் பார்த்தார். ஜெயலலிதாவை லண்டன் அழைத்து செல்ல ஆலோசித்து வந்தோம். சிகிச்சை பெற்றது மிகப்பெரிய தலைவர் என்பதால் சிகிச்சை முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 5ஆம் தேதிதான் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.
ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து வந்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசி வந்தேன். பிசியோதெரபி முடிந்த பின்னர் மூச்சு விடுவதற்கு ஜெயலலிதா சிரமப்பட்டு வந்தார்.
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment