Friday, 24 February 2017

சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நான்சாங் நகரத்தில் ஆடம்பர சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த சொகுசு ஓட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் 3 பேர் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 14 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். இன்னும் பலர் ஓட்டலுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அடுக்குமாடி ஓட்டலில் பல தளங்களில் தீ பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தீ அணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஓட்டலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன.  எச்.என்.ஏ என்ற அந்த ஓட்டல் 4 தளங்களை கொண்டதாகும். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment