Tuesday, 21 February 2017

சாகாவரம் பெற்ற புற்றுநோய் செல்கள்

டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் அவர்கள் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியுள்ள ஆன்டியாக்சிடண்ட் ஆராய்ச்சிதான் அது. டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் தன் குழுவினருடன், ஆற்றல்மிக்க மூலிகை ஆன்டியாக்சிடண்ட் கூட்டுப் பொருளான ‘ஜங்கோ பிலோபா’ வடிப்பின் (Ginkgo Biloba Extract) திறனை ஆய்வுக்கூட சுண்டெலிகளைக் (Laboratory Mice) கொண்டு ஆராய்ந்துள்ளனர். சுண்டெலிகளை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுக்கு ‘ஜிங்கோ பிலோபா வடிப்பும்’ மறு குழுவுக்கு வெறும் உணவு மட்டும் கொடுக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் இருவகை சுண்டெலிகள் மூளை செல்களில் ‘ஜிங்கோ பிலோபா’-வின் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக பொதுவாக எல்லாராலும் ஜிங்கோ பிலோபா பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சில ஆராய்ச்சிகளில் அல்சீமர்ஸ்  நோய் வளர்ச்சி வேகத்தை ஜிங்கோ பிலோபா குறைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பீடெர் சுலட்ஜ் நடத்தியுள்ள இந்த ஆராய்ச்சிகளில் ஜிங்கோ பிலோபா மூளை  செல்களின் பலவகை மரபணுக்களின் செயல்பாடுகளை உயர்த்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுண்டெலிகளுக்கு ஜிங்கோபிலோபா கொடுத்த பிறகு மூளை செல்களின் 10-மரபணுக்கள் செயல்திறன் 16-மடங்கு உயர்ந்துள்ளது. 10-மரபணுக்களில் ஒன்று மூளையின் ஹிப்போகாம்பஸ் செயல்பாடுகள் பாராட்டும்படி உயர்ந்திருந்தன. ‘ஹிப்போகாம்பஸ்’ புதியவை கற்பதற்கும் நினைவாற்றலுக்கும் உரிய மூளை உறுப்பு.

மற்ற 9-மரபணுக்களும், பெருமூளை மேற்பரப்பு புறணியின் (Cerebral Cartex) உயிர் வேதியல் Biochemical செயல்பாடுகளை குறிப்பிடும் வகையில் உயர்த்தியிருந்தன. பெருமூைள புறணி ஒருவருடைய நினைவாற்றல், பேச்சுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடு, உடல் இயக்க அசைவுகள் போன்றவை உருவாகும், ஒழுங்குப்படுத்தும் முக்கியப்பகுதி.

ஜிங்கோ பிலோபா உட்கொண்டதால், மேலே குறிப்பிட்டுள்ள மரபியல் செயல்பாடுகள் மேம்பாடு, அறிவாற்றல் செயல்பாடுகள் (Cognition) மற்றும் நினைவாற்றல் இரண்டும் ேமம்பட்டுள்ளன.

உயிரியல் சுழற்சி செய்முறைகளால், உடல் செல்கள் வளர்ச்சி, DNA இரட்டிப்பு (Replication), புதிய செல்கள் உருவாக்கம் ஆகியவை இயல்பாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இதைப் போலவே ஆன்டியக்சிடண்டுகள் செல் சுழற்சி இயல்பாக நடைபெறுவதை ஆன்டியாக்சிடண்டுகள் ஒழுங்குபடுத்துகின்றன.

புற்றுச் செல்களின் மரபணுக்களும் ஆன்டியாக்சிடண்ட்களும் உடலில் உள்ள ஏறத்தாழ எல்லா செல்களிலும், ‘அபோப்டோசிஸ்’ எனும் ‘செல் தற்கொலைத் திட்டம்’ அமைந்துள்ளது. செல்கள் குறிப்பிட்ட காலம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்ததும், தற்கொலைத் திட்டத்தின்படி, உயிரியல் சுழற்சி நிறுத்தப்பட்டு ‘செல் இறப்பு’ தூண்டப்படுகிறது.

இது இயற்கை செல் இறப்பு செய்முறை. நோய் எதிர்ப்பு இயக்கம் செயல்பட்டு இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. முதிர்ந்த செல்களில் மரபியல் குறிப்புகள் சிதைந்து விடுவதால், அவை அகற்றப்படாவிட்டால், புற்றுச் செல்லாக மாற்றமடையக் கூடும். அதனால், இந்த ‘செல் தற்கொலைத் திட்டம்’ புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

புற்றுச்செல்களில் ‘தற்கொலைத் திட்டம்’ இல்லை. புற்றுச்செல்கள் ‘சாகாவரம்’ பெற்றவை. இப்போது ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ‘புற்றுச் செல்கள்’ எப்போதோ, புற்றுநோய் அறுவை மருத்துவத்தின் போது  பெறப்பட்ட முன்னாள் புற்றுச்செல்களின் வழித்தோன்றல் செல்கள்தான். புற்றுச் செல்களில் அமைந்துள்ள மரபியல் திட்டம் அவைகளுக்கு ‘சாகாமை’ அளித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், புற்றுச்செல்களை அழியாமல் பாதுகாக்கும் ‘செல் சுழற்சி’யில் ஆன்டியாக்சிடண்டுகள் குறுக்கிட்டுத் தடுப்பதாகவும், புற்றுச்செல்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் (apoptosis) கண்டு பிடித்துள்ளனர். புற்றுச் செல் ஆராய்ச்சிகளில் E-உயிர்ச்சத்து, பீட்டா-கெரோட்டின், மூலிகை வடிப்பான ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்படுகின்றன.

இவை மூன்றும்ஆன்டியாக்சிடண்ட் ஊட்டச்சத்துக்கள்.டென்வெர் ‘AMC’ புற்று ஆராய்ச்சி நிலையத்தில் மார்புப்புற்றுச் செல்கள் ஆராய்ச்சிகளில் ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்பட்டது.புதிய புற்றுச்செல் உருவாக்கும் செய்முறையில் டிஎன்ஏ படியெடுப்புக்கு சற்றுமுன் சிலிமாரின் படியெடுப்பைத் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஆன்டியாக்சிடண்டுகள் புற்றுச்செல் வளர்ச்சியைத் தடுப்பது தெளிவாகிறது. ஆன்டியாக்சிடண்டுகள் நல்ல செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை.

ஃபிரிரேடிகல் சிதைவுகளும் - டிஎன்ஏ பாதுகாப்பும்டிஎன்ஏ மரபணுக்கள், குரோமோசோம்கள் ஆகிய மரபியல் கூறுகளை ஃபிரிரேடிகல்கள் தாக்கிச் சிதைக்கின்றன. இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து இவற்றை ஆன்டியாக்சிடண்டுகள் பாதுகாக்கின்றன. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அவற்றில் மூன்று ஆராய்ச்சிகளைப் பார்ப்போம்.

No comments:

Post a Comment