மும்பையில் இருந்து ஆளுநர் சென்னை புறப்பட்டார்: விமான நிலையத்தில் வரவேற்க ஓ.பி.எஸ். திட்டம்
மும்பை இல்லத்தில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை புறப்பட்டார். விமானத்தில் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை வரும் ஆளுநரை விமான நிலையத்தில் வரவேற்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை சென்னை வரும் ஆளுநரை அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணி அளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சசிகலா திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை சென்னை வரும் ஆளுநரை அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணி அளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சசிகலா திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment