Wednesday, 22 February 2017

மின்சார ரெயிலில் படியில் தொங்கிய 7 பேர் மின்கம்பம் மோதியதால் விழுந்து 3 பேர் பலி

செங்கல் பட்டில் இருந்து விரைவு மின்சார ரெயில் ஒன்று இன்று காலை கடற்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. சென்னை பரங்கிமலை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தது.மின்சார ரெயிலின் படியில் தொங்கியபடி பல இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது  ஒருவர் பை மின்கம்பத்தில் பட்டு படியில் தொங்கிக் கொண்டு இருந்த 7 பேர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தனர்  இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 2 பேர் பெயர் தெரியவந்து உள்ளது ஒருவர் மதுசூதனன்,மற்றொருவர் கோபி

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.உயிர் இழந்தவர்களில் ஒருவர் பெருங்காலத்தூரை சேர்ந்த பிரவீன் ஆவார்.

No comments:

Post a Comment